எனவே, மீளவிட்டான் ரயில் நிலையப் பாதையைத் தார்ச்சாலையாகத் தரம் உயர்த்திப் புதிய சாலை அமைக்க வேண்டும், சாலையின் இருபுறமும் மண்டிக்கிடக்கும் முள்செடிகளையும் புதர்களையும் முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும், இரவு நேரப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய மின்விளக்குகளை அமைக்க தெற்கு ரயில்வே நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.