தூத்துக்குடியில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வது என்று இந்து முன்னணி ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி எழுச்சித் திருவிழா குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநில இணை அமைப்பாளர் பொன்னையா வழிகாட்டுதலின்படி, கோட்டச் செயலாளர் பிரம்ம நாயகம் தலைமையில் சுப்பையா முதலியார் புரம் 1-வது தெருவில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், இந்த ஆண்டு தூத்துக்குடி மாநகரப் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்து கோலாகலமாகக் கொண்டாட ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது.
இதில், மாவட்ட துணைத் தலைவர் ஆதிநாதன் ஆழ்வார், மாவட்டச் செயலாளர் சரவணகுமார். செயற்குழு உறுப்பினர்கள் பலவேசம், கவின், சண்முகம், பழனியாண்டி, முத்துகிருஷ்ணன், மண்டலத் தலைவர்கள் பாலமுருகன், சதீஷ், பிரபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.


