தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஜூலை மாதத்தில் நடத்தப்பட உள்ள மக்கள் தொடர்பு முகாமிற்கான முன்னோடி மனுநீதி நாள் நாளை (ஜூன் 17) நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை அளித்துப் பயன்பெறலாம் எனத் தூத்துக்குடி வட்டாட்சியர் திருமணி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பங்கேற்கும் மக்கள் தொடர்பு முகாம் வரும் ஜூலை மாதத்தில் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமிற்கான முன்னோடி மனுநீதி நாள் நாளை, புதன்கிழமை (17.06.2026) அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறுகிறது.
தூத்துக்குடி வட்டம், சேர்வைகாரன்மடம் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்து இந்த முன்னோடி மனுநீதி நாள் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் முன்னோடியாகப் பெறப்பட உள்ளன.
எனவே, சேர்வைகாரன்மடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பொதுமக்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, தங்களின் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் தனிநபர் கோரிக்கை குறித்த மனுக்களை நாளை நேரில் அளித்துப் பயன்பெறலாம் எனத் தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகச் செய்தி மக்கள் தொடர்புப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


