கோவில்பட்டியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்து சமூக ஆர்வலர்கள் பாடை கட்டி நூதனப் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரின் பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் தரப்பில் பலமுறை முறையிட்டும், எவ்வித முயற்சியும் எடுக்காமல் காலம் கடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
அதிகாரிகளின் அலட்சியப் போக்கினைக் கண்டித்து கோவில்பட்டி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாடை கட்டி, நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.


