பாளையங்கோட்டை என்.ஜி.ஓ.காலனியை சேர்ந்தவர் சக்தி நாதன். இவர் அண்ணா பல்கலைகழக முதல்வராக பணியாற்றியவர். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நீர் நிலைகளை தூர்வார அரசுடன் இணைந்து செயல் பட்டவர். இவருடைய வரலாற்றை இந்த நூலில் தொகுத்து எழுதியுள்ளார் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு. அவர் குடும்பம், அவர் செய்த சாதனை, அவர் வாங்கிய விருது என எழுதியவர். கொரோனா நோய் காலத்தில் இந்த உலகத்தினை விட்டு சக்திநாதன் பிரிந்ததை எழுதும் போது கண்ணில் நீர் சொட்ட வைக்கிறார். ஆனாலும் அவர் நினைவாக இன்றும் நதி உயிர்பித்து வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கும் போது மனதுக்கு நிம்மதியை தருகிறது.
சக்தி நாதன் எனும் சகாப்தம் – பொன்சொர்ணா பதிப்பகம் -முத்தாலங்குறிச்சி காமராசு


