நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக கருங்குளம் பஞ்சாயத்து திருவரங்கப்பட்டி ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. தொடர்ந்த மழை பெய்த காரணத்தினால் ஊருக்குள் தண்ணீர் வரத்து அதிகரித்து கொண்டே இருந்தது. இன்று காலை மழை பெய்வது குறைந்து வெயில் அடித்தது. எனவே வெள்ளம் வற்றி கொண்டே வந்தது. அன்றாட வாழ்க்கை பாதிப்பில் இருந்து திருவரங்கப்பட்டி மக்கள் மீண்டனர். ஆனாலும் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றும் மிக கனமழை உள்ளது என வானிலை அறிக்கை வெளிவந்துள்ளது.


