
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் உள்ள முள்செடிகள் மற்றும் புதர்களை அகற்றும் பணி கடந்த ஜுலை 6 ந்தேதி கலியாவூர் மருதூர் அணையில் துவங்கியது. இந்த பணியை கனிமொழி எம்.பி துவக்கி வைத்தார்கள். எக்ஸ்னோரோ நி-றுவனத்தின் மூலம் வாடகை இல்லா இயந்திரம் மூலம் மற்றும் தனியார் அரசு உதவுயுடன் நதியை சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது. மருதூர் அணை, செந்நெல்பட்டி, ஆழிகுடி, முத்தாலங்குறிச்சி ஆறாம்பண்ணை ஆகிய பகுதிகளில் இந்த பணி நடந்து முடிந்துள்ளது. மழை பெய்த காரணத்தினால் இந்த பணி இடையில் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது மாவட்ட ஆட்சிதலைவர் இளம்பகவத் அவர்கள் ஆலோசனை படி நிதி பெறப்பட்டு மீண்டும் இந்த பணி துவங்கியுள்ளது. இந்த பணி கருங்குளம் ஆற்றின்நடுவே புதர் மண்டி கிடக்கும் இடத்தில் இருந்து துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, கீழக்கால் பாசன உதவியாளர் ராஜ்குமார், கொங்கராயகுறிச்சி பஞ்சாயத்து கிளார்க் பிராங்கலின் உள்பட சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். தாமிரபரணி ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு பாராட்டுகளை தெரிவித்து உள்ளனர்.