தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்தைச் சேர்ந்த ஓட்டப்பிடாரம் மற்றும் ஒட்டநத்தம் ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை (ஜூலை 18) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காணரமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்துத் தூத்துக்குடி நகர் விநியோகச் செயற்பொறியாளர் லெ.சின்னத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாளை (சனிக்கிழமை) காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை பராமரிப்புப் பணிகள் காரணமாகக் கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை செய்யப்படும் பகுதிகள் வருமாறு:
ஓட்டப்பிடாரம் துணைமின் நிலையம்:
ஓட்டப்பிடாரம், ஓசநத்து, ஆரைக்குளம், குலசேகரநல்லூர், பாஞ்சாலங்குறிச்சி, வெள்ளாரம், க.சுப்பிரமணியபுரம், குறுக்குச்சாலை, புதியம்புத்தூர், சில்லாநத்தம், சாமிநத்தம், கொம்பாடி, தளவாய்புரம், தெற்குவீரபாண்டியபுரம், ஆவாரங்காடு, அகிலாண்டபுரம், முப்பிலிவெட்டி, பரம்பூர், வேடநத்தம் மற்றும் கே.குமாரபுரம்.
ஒட்டநத்தம் துணைமின் நிலையம்:
சொக்கநாதபுரம், வாஞ்சிமணியாச்சி சந்திப்பு, மணியாச்சி, வடமலாபுரம், பாறைக்கூட்டம், மேலப்பாண்டியபுரம், சண்முகபுரம், மேலப்பூவானி, கீழப்பூவானி, அக்கநாயக்கன்பட்டி, லெட்சுமிபுரம், ஒட்டநத்தம், மலைப்பட்டி, கல்லத்திகிணறு, முறம்பன், சங்கம்பட்டி, சுந்தரராஜபுரம், பரிவில்லிக்கோட்டை, ஐரவன்பட்டி, கோபாலபுரம், கூட்டுப்பண்ணை, கொத்தாளி, தென்னம்பட்டி, கோவிந்தாபுரம், கொல்லன்கிணறு, மருதன்வாழ்வு, T.ஐயப்பபுரம், வேப்பங்குளம், கலப்பபட்டி மற்றும் கீழக்கோட்டை காலனி.


