சூறாவளி காற்று காரணமாக தூத்துக்குடியில் இன்று 2வது நாளாக விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
மன்னார் வளைகுடா கடல் பகுதி மற்றும் தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் பலத்த காற்று சூறாவளி காற்றாக சுமார் 55 கிலோ மீட்டர் முதல் 65 கிலோ மீட்டர் வரை வீச கூடும் என்பதால் அந்தப் பகுதியில் தொழில் செய்யும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஏற்கனவே கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கடல் பகுதியில் வீசும் காற்றைத் தொடர்ந்து பாதுகாப்பாக மீன்பிடிக்கவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை சார்பில் இன்று இரண்டாவது நாளாக தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகள் கடலுக்கு செல்ல வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் 280க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இன்று இரண்டாவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத


