தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 13 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று இன்று பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 56 ஆயிரத்து 431 ஆக உள்ளது. இன்று 13 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கரோனாவில் இருந்து இதுவரை 55 ஆயிரத்து 940 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் 82 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 409 ஆக உள்ளது.