
தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு இன்று மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
அரசு பள்ளிகளில் புதிய மாணவர்களைச் சேர்க்கும் பணியை மேலும் துரிதப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. அதன்படி விஜயதசமி அன்று அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளையும் திறந்து வைக்க தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு இன்று மாணவர் சேர்க்கை நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் எமல்டா மாணவர் சேர்க்கை விண்ணப்ப படிவங்களை வழங்கினார். இதில் ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளுடன் வந்து விண்ணப்பங்களை பெற்றுச் சென்றனர்.