தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் வருகிற 7 மற்றும் 12 ஆகிய தேதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 7 (வெள்ளிக்கிழமை): தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளுக்குக் குடிநீர் விநியோகம் செய்யப்படும் வல்லநாடு தலைமை நீரேற்று நிலையப் பகுதியில், குறிப்பாகக் கலியாவூரிலிருந்து வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வரும் பிரதான குடிநீர் குழாயில் பெரிய அளவிலான உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் குடிநீர் பெருமளவில் வெளியேறுவதால், அதனை உடனடியாகச் சீரமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால் 07.08.2026 (வெள்ளிக்கிழமை) அன்று குடிநீர் விநியோகம் இருக்காது.
ஆகஸ்ட் 12 (புதன்கிழமை): கொம்புகாரநத்தம் உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், 12.08.2026 (புதன்கிழமை) அன்றைய தினமும் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.
மேற்கண்ட இரு தினங்களிலும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதால், பொதுமக்கள் தங்களுக்குக் கிடைக்கும் குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, மாநகராட்சியின் பராமரிப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா வேண்டுகோள் விடுத்துள்ளார்.


