
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவராமமங்கலத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன்(37). இவர் சொந்த ஊரில் தச்சு வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவியும், 9 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர் இன்று மதியம் ஊரின் அருகில் உள்ள வாய்க்காலில் குளிக்கச் சென்றுள்ளார். இவருக்கு ஏற்கனவே வலிப்பு நோய் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடிரென அவர் குளித்துக்கொண்டிருந்த போது நிலை தடுமாறி வாய்க்காலில் விழுந்துள்ளதாக தெரிகிறது. மாலை அப்பகுதியில் குளிக்க வந்தவர்கள் மாரியப்பன் இறந்த கிடந்ததை பார்த்து உடனே ஏரல் போலிசாருக்கு தகவல் கொடுத்தனர். போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாரியப்பனின் உடலை மீட்டு பிரே பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வாய்க்காலில் முழ்கி தச்சு தொழிலாளி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.