
தூத்துக்குடி மாவட்டக் கலை மன்றம் வாயிலாக சிறந்த பத்து கலைஞர்களுக்கு 2017-2018ஆம் ஆண்டுகளுக்கான கலை விருதுகள் கலெக்டர் என்.வெங்கடேஷ் அறிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது….
தமிழ் நாட்டின் கலைப் பண்புகளை மேம்படுத்தவும், பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞர்களின் கலைத்த திறனை சிறப்பிக்கும் வகையிலும் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் செயல்படும் மாவட்டக் கலை மன்றங்களின் வாயிலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 2002-2003ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வயது மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் சிறந்த ஐந்து கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளது.
அவ்வாணையின்படி 2002-2003ஆம் ஆண்டு முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் 2016-2017ஆம் ஆண்டு வரையிலும் 75 கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளன.
2017-2018ஆம் ஆண்டுகளுக்கான கலை விருதுகள் கலை பண்பாட்டுத் துறையின் துறையின் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி மாவட்ட கலை மன்றத்தின் வாயிலாக, தூத்துக்குடி மாவட்டத்தில் இயல், இசை, நாடகம் முதலிய கலைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் தலா ஐந்து கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் தேர்வாளார் குழு அமைக்கப்படவுள்ளது. ஆகவே தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டு, பரதநாட்டியம், கும்மி, கோலாட்டம், மயிலாட்டம், தேவராட்டம், தோல்பாவைக்கூத்து, பொம்மலாட்டம், நையாண்டிமேளம், கரகாட்டம், காவடி, பொய்கால் குதிரையாட்டம், மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், கழியல் ஆட்டம், கணியான்கூத்து, ஓவியம், சிற்பம், அரசன் அரசியாட்டம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், குறவன் குறத்தியாட்டம், ஆழியாட்டம். கைச்சிலம்பாட்டம், சிலம்பாட்டம் (வீரக் கலை) மற்றும் வில்லிசை முதலிய செவ்வியல் கலைகள், நாட்டுப்புறக் கலைகள் என அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கலை விருதுகள் முறைறே
1. 18 வயது அதற்குட்பட்டகலைஞர்களுக்கு – கலை இளமணி
2. 19 முதல் 35 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு – கலை வளர்மணி
3. 36 முதல் 50 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு – கலைச் சுடர்;மணி
4. 51 முதல் 60 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு – கலை நன்;மணி
5. 61 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு – கலை முதுமணி
என்ற நிலைகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.
வயது மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் தேர்தெடுக்கப்படும் பத்து சிறந்த கலைஞர்களுக்கு பொற்கிழி, பட்டயம் மற்றும் பொன்னாடையும் வழங்கப்படும்.
மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய விருதுகள், மாநில விருதுகள் (கலைமாமணி) மற்றும் ஏற்கனவே மாவட்டக் கலை மன்றத்தின் விருதுகளைப் பெற்ற கலைஞர்கள் இவ்விருதிற்கு பரிசீலனை செய்யப்படமாட்டார்கள்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த கலைஞர்கள் விருதுகள் பெறுவதற்கான விண்ணப்பத்துடன் வயதுச் சான்று, முகவரிச்சான்று மற்றும் கலை அனுபவச் சான்றுகளின் நகல்களுடன் (தொலைப்பேசி எண்ணுடன்) கீழ்கண்ட முகவரிக்கு 10-03-2018க்குள் விண்ணப்பிக்குமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் என்.வெங்கடேஷ்; தெரிவித்துள்ளார்கள்.
உதவி இயக்குநர்,
மண்டலக் கலை பண்பாட்டு மையம்,
870 ஃ21, அரசு அலுவலர் ‘ஆ’ குடியிருப்பு,
(தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகம் அருகில்)
திருநெல்வேலி – 7.
தொலைப்பேசி எண். 0462-2553890
10-03-2018 தேதிக்குப் பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் இந்த ஆண்டுத் தேர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.