தூத்துக்குடியில் உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில், மருந்து, மாத்திரைகள் இல்லாத ‘MCKS பிராண சிகிச்சை’ சிறப்பு முகாம் வருகிற 4 மற்றும் 5ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து பிராண நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “MCKS பிராண சிகிச்சை என்பது நோயாளியைத் தொடாமலும், மருந்து மாத்திரைகள் இல்லாமலும் செய்யப்படும் ஒரு நவீன சிகிச்சை முறையாகும். பிராணா’ எனப்படும் உயிர்ச்சக்தியைப் பயன்படுத்தி, உடல் உபாதைகள் மற்றும் மனோவியல் ரீதியான சிக்கல்களைச் சீரமைக்க இச்சிகிச்சை பெரிதும் உதவுகிறது.
தூத்துக்குடியில் இம்முகாம் வருகிற 4 மற்றும் 5 (சனி – ஞாயிறு) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை “MCKS பிராண நிலையம், AG காம்ப்ளக்ஸ், முதல் தளம், ராஜா ஸ்டோர்ஸ் அருகில்” என்ற முகவரியில் வைத்து நடைபெற உள்ளது. முகாமில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். முன்பதிவிற்கு 98944 85991 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு பிராண நிலையம் அழைப்பு விடுத்துள்ளது.


