எட்டயபுரத்தில் அமுதகவி உமறுப்புலவர் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் அமைச்சர் கீதாஜீவன் மரியாதை செலுத்தினார்.
அமுதகவி உமறுப்புலவர் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் உள்ள அன்னாரது மணிமண்டபத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் ஆகியோர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் கோவில்பட்டி சார் ஆட்சியர்(பொ) செந்தில்வேல் முருகன், எட்டயபுரம் பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி, எட்டயபுரம் வட்டாட்சியர் சுபா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


