Description
முத்தாலங்குறிச்சி தாமிரபரணி கரை குக்கிராமம் தான். ஆனால் இங்குள்ள மண்ணுக்கு சிறப்பு. பெண்ணுக்கு சிறப்பு. கோயிலுக்கு சிறப்பு. ஊரை சுற்றி உள்ள கரைகளுக்கு சிறப்பு. இங்குள்ள மண்ணும் பொன்தான். ஆம். இங்கு தயாரிக்கும் செங்கல்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகிறது. மதுரை ஸ்பெஷல் ஜிகிர் தண்டா தோன்ற காரணம் இந்த ஊர் ஆற்றில் குளிக்கும் போது இஸ்லாமியர் ஒருவருக்கு தோன்றிய யோசனை தான். இது போன்று பல ருசிகர குறிப்புகள் உண்டு.