
சுஜாதா என்று பரவலாக அறியப்பட்ட புகழ்பெற்ற எழுத்தாளர் ரங்கராஜன், தனது தனிப்பட்ட கற்பனை நடையால் பல வாசகர்களை கவர்ந்தவர். அவரது முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிகையில் வெளிவந்தது. இவர் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதைவசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் முத்திரை பதித்தவர்.திருச்சி ஸ்ரீரங்கத்தில் 1935 மே 3-ந் தேதி பிறந்து, உள்ளூர் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பி.எஸ்சி. (இயற்பியல்) படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை வந்த சு சுஜாதா, குரோம்பேட்டை எம்.ஐ.டி.யில் பி.இ. (மின்னணுவியல்) கற்றார். திருச்சி புனித ஜோசப் கல்லூரியில்,(மறைந்த குடியரசுத்தலைவர்) அப்துல் கலாம், சுஜாதா இருவரும் ஒரே வகுப்பில் படித்தார்கள்.அதன் பின்னர் நடுவண் அரசுப் பணியில் சேர்ந்தார். டெல்லியில் முதலில் பணியாற்றினார். 14 ஆண்டுகள்,அரசுப் பணியில் இருந்த சுஜாதா, பி ன் ன ர் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும் மேலும் பல்வேறு பொறுப்புகளிலும் பணியாற்றினார். பின்னர் பொது மேலாளராக உயர்ந்தார். பதவி யிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னைக்குத் திரும்பினார். அறிவியலை, ஊடகம் மூலமாக, மக்களிடம் கொண்டு சென்றதற்காக, அவரைப் பாராட்டி, ‘தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம்‘ அவருக்கு 1993ம் ஆண்டு விருது வழங்கிக் கெளரவித்தது.இந்தியாவில் மின்னணு வாக்குப் பதிவுப் பொறியை உ ருவாக்க முக்கியக் காரணமாக இவர் ருந்தார். இதை உருவாக்கிய பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் முக்கிய உறுப்பினராக இருந்தார், சுஜாதா. இப்பொறியை உருவாக்கியதற்கா க அவருக்கு வாஸ்விக் விருது வழங்கப்பட்டது. சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி, அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி வி ரு து ம் வழங்கப்பட்டுள்ளது.இவருடைய 2 இடது ஓரத்தில்” 66 என்ற சிறுகதை 1962 ஆம் ஆண்டு குமுதம் இதழில் ரங்கராஜன் என்ற பெயரில் வெளிவந்தது. குமுதம் ரா. கி. று நாள் ரங்கராஜனின் பெயரும் இவர் பெயரும் குழப்பிக் கொள்ளப் பட்டதால் தன் மனைவி பெயரான, ‘சுஜாதா’வைத், தன் புனைப் பெயராக வைத்துக் கொண்டார். கணையாழி இதழில் கடைசிப் பக்கங்கள் எனும் கட்டுரைத் தொட 6/9 ஸ்ரீரங்கம் எஸ். ஆர் எனும் பெயரிலும் எழுதி வந்தார்.சுஜாதா இலக்கியம், நாட்டார் வழக்காறு, தமிழ்ச் செவ்விலக்கியம், துப்பறியும் கதை, அறிவியல் கதை, சிறுகதை, புதினம், குறும் புதினம், நாடகம், திரைப்படம், கணிப்பொறியியல், இசை இ என்று பல பாணிகளிலும் வகைகளிலும் எழுதியுள்ளார்.புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், தொகை நூல்கள் என இருநூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். ஒரு கவிதைத் தொகுப்பும் படைத்துள்ளார்.
திரைப்படமாக்கப்பட்ட இவருடைய கதைகள்:
அனிதா இளம் மனைவி (இது எப்படி இருக்கு திரைப்படம்), காயத்ரி, கரையெல்லாம் செண்பகப்பூ, பிரியா, விக்ரம், வானம் வசப்படும், ஆனந்த தாண்டவம், சைத்தான்.
பணியற்றிய திரைப்படங்கள்:
ரோஜா, இந்தியன், ஆய்த எழுத்து, அந்நியன், பாய்ஸ், முதல்வன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜீன்ஸ், உயிரே, விசில், கன்னத்தில் முத்தமிட்டால், சிவாஜி த பாஸ், எந்திரன், வரலாறு, செல்லமே.
உடல் நிலை மோசமானதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுஜாதா சிகிச்சை பலனின்றி 2008-ம்
ஆண்டு பிப்ரவரி 27 மறைந்தார். மறைந்த ரங்கராஜனுக்கு அரங்கபிரசாத், கேசவ பிரசாத் என இரு மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவரும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.