
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிகளை மீறி முக கவசம் அணியாத 402 பேருக்கு ரூ.80,400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பரவி வருவதால் பொது இடங்களில் அதிக அளவில் பொதுமக்கள் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு தலா ரூ.200 அபராதமும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு தலா 500 அபராதமும் விதிக்கப்படுகிறது.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (20.01.2022) பொது இடங்களில் முககவசம் அணியாத தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 101 பேர் மீதும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 33 பேர் மீதும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 42 பேர் மீதும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 25 பேர் மீதும், மணியாச்சி உட்கோட்டத்தில் 31 பேர் மீதும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 100 பேர் மீதும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 23 பேர் மீதும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 547 பேர் மீதும் என மொத்தம் 402 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.80,400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மணியாச்சி உட்கோட்டத்தில் ஒருவரும், திருச்செந்தூர் ரூட் கோட்டத்தில் ஒருவரும் என சமூக இடைவெளி கடைப்பிடிக்காத 2 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்களுக்கு மொத்தம் ரூ.81,400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் கொரோனா பரவலை தடுக்கும்பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள விதிகள் மற்றும் நெறிமுறைகளை கடைபிடித்து முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி நம்மையும் காப்பாற்றி, நம்மால் பிறருக்கு தொற்று பரவாமல் பிறரையும் காப்பாற்ற வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.