
செய்துங்கநல்லூரில் பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
தமிழக அரசு சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் வியாழக்கிழமைகளில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் என்று தெரிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து நேற்று தமிழகமெங்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி நடந்தது.
இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள் கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவர் திலீப் தலைமையில் செய்துங்கநல்லூர் காவல் நிலையம், செய்துங்கநல்லூர் பஜார், யூனியன் அலுவலகம் ஆகிய இடங்களில் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பொதுமக்கள், அரசு ஊழியர்கள், மற்றும் பணியாளர்கள் ஆர்வமுடன் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் சண்முக பெருமாள், செவிலியர்கள் பாரதி, ஜெயசுதா ஆகியோர் செய்திருந்தனர்.