
தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘கண்ணை நம்பாதே’ படம் ரிலீசாகியுள்ள தியேட்டரில் நற்பணி மன்றத்தினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
திமுக மாநில இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ‘கண்ணை நம்பாதே’ என்ற திரைப்படம் இன்று வெளியானது. தூத்துக்குடியில் பாலகிருஷ்ணா தியேட்டரில் இன்று வெளியான ‘கண்ணை நம்பாதே’ திரைப்படத்தின் முதல் காட்சியை மாநில திமுக இளைஞர் அணி துணைச் செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் வழிகாட்டுதல்படி மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தினர் பட்டாசு வெடித்து உற்சாகத்துடன் வரவேற்றனர்.
திரைப்படம் காண வந்த ரசிகர்களை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பால்துரை தலைமையில் நற்பணி மன்றத்தினர் கேக் வெட்டியும், ரசிகர்களுக்கு இனிப்பு கொடுத்தும் உற்சாகத்துடன் வரவேற்று மகிழ்ந்தனர். இதில், நற்பணி மன்ற மாவட்ட செயலாளர் பொருளாளர் சேக்முகமது, துணை தலைவர் நடராஜன், துணை செயலாளர்கள் தொழிலதிபர் காளி, புதுக்கோட்டை சிவமுருகன், மாநகர தலைவர் இளம் தொழிலதிபர் ஏபிஆர்.ஜோ, மாநகர துணை தலைவர் அருண், மாநகர துணை செயலாளர் டினோ, மாநகர பொருளாளர் முகமது, துணை பொருளாளர் சுப்பிரமணியன் மற்றும் தினேஷ்குமார், அபியூத், திமுக இளைஞரணி தொழிலதிபர் வசந்த், தளபதி முருகன், உட்பட பலர் கலந்துகொண்டனர்.