
தேசிய காசநோயகற்றும் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை இணைந்து நடத்தும் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் (21.01.2023) இன்று கருங்குளம் அருகேயுள்ள புளியங்குளத்தில் நடைபெற்றது. முகாமினை சமூக ஆர்வலர் திரு.சீதன்ராஜ் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் *திரு.அ.அப்துல் ரஹீம் ஹீரா* அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.முதுநிலை காசநோய் ஆய்வுக்கூட மேற்பார்வையாளர் திரு.ச.இசக்கி மஹாராஜன் அவர்கள் முன்னிலை வகித்தார்.இம்முகாமில் 40 நபர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. 13 நபர்களுக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை கிராம வளர்ச்சி அலுவலர் திருமதி.செல்வராணி,அவர்கள் நன்றி கூறினார்.
இம்முகாமில் எக்ஸ்ரே நுட்பனர் திரு.கிறிஸ்டின் குமாரதாஸ், சுகாதார பார்வையாளர் திருமதி.முத்துலட்சுமி, நம்பிக்கை மைய ஆற்றுப்படுத்துனர் திருமதி.அய்யம்மாள் திருமதி சந்தனமாரி, திரு.அரி பாலகிருஷ்ணன் டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை கிராம வளர்ச்சி அலுவலர் திரு.பாலசுப்ரமணியன், சமுதாய வளர்ச்சி அலுவலர் திரு.பரமசிவம்
சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் டி.வி.எஸ். சேவைகள் அறக்கட்டளை ஆகியோர்கள் இணைந்து செய்திருந்தார்கள்.