
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற தலைமை காவலர் மகளுக்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் பாராட்டு தெரிவித்ததுள்ளார்.
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்திலேயே திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவியான துர்கா என்பவர் ஒருவர் மட்டுமே தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்த மாணவியின் தந்தை செல்வக்குமார் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலைய தலைமை காவலராக பணியாற்றி வருவது குறிப்பிடதக்கது.
தலைமை காவலரான செல்வக்குமார் என்பவர் காவல்துறையில் 1997ம் வருடம் பணியில் சேர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பல காவல் நிலையங்களில் சிறந்த முறையில் பணியாற்றி கடந்த 2 வருடங்களாக ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர், மாணவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் மாணவி துர்காவையும், அவரது குடும்பத்தாரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டியதோடு மேற்படிப்புகளிலும் இதே போன்று நன்கு படித்து முதலிடம் பெறவேண்டும் என்று மாணவியை வாழ்த்தி பரிசு வழங்கினார். அவருடன் அவரது தந்தையான தலைமைக காவலர் செல்வக்குமார் மற்றும் அவரது தாயார் ஹேமா சுப்புலெட்சுமி உட்பட அவரது குடும்பத்தினர் உடனிருந்தனர்.