
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 19 பேர் குணமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பரவலை தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று மாவட்டத்தில் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 56 ஆயிரத்து 161 ஆக உள்ளது.
நேற்று 19 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் மாவட்டத்தில் இதுவரை கரோனாவில் இருந்து 55 ஆயிரத்து 596 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் 157 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 408 ஆக உள்ளது.