தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் ஒரு லட்சம் விதைப்பந்துகள் வீசும் திருவிழாவினை மாவட்ட வன அலுவலர் இளையராஜா தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் வந்து ஊருக்கு புகுவதற்கு காரணம் ஆற்றில் அதிகமாக வளர்ந்து நிற்கும் முள்செடி புதர்களே. எனவே இந்த முள்செடி புதரை அகற்ற தமிழக அரசுவுக்கு பல கோரிக்கை எழுந்து வந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2023 டிசம்பர் மாதத்தில் வெள்ளப்பாதிப்பு மிக அதிகமாக இருந்தது. குறிப்பாக அகரம், ஆழிகுடி, முத்தாலங்குறிச்சி, ஆறாம்பண்ணை, கொங்கராயகுறிச்சி, ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஏரல் சுற்றுப்பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். ஆற்று கரைகள் உடைந்து விட்டது. இதை சீரமைக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுத்துவருகிறார்கள்.
இந்த நிலையில் தாமிரபரணி ஆற்றில் முள்செடிகள் மற்றும் புதர்களை அகற்றும் பணி கடந்த 2024 ஆம் ஆண்டு ஜுலை 6 ந்தேதி கலியாவூர் மருதூர் அணையில் துவங்கியது. இந்த பணியை கனிமொழி எம்.பி துவக்கி வைத்தார். முன்னாள் மாவட்ட ஆட்சித்தலைவர் லெட்சுமிபதி முன்னிலை வகித்தார். எக்ஸ்னோரோ நி-றுவனத்தின் மூலம் வாடகை இல்லா இயந்திரம் மூலம் , தனியார் மற்றும் அரசு உதவியுடன் நதியை சுத்தப்படுத்தும் பணி தொடர்ந்து நடந்தது. மருதூர் அணை, செந்நெல்பட்டி, ஆழிகுடி, முத்தாலங்குறிச்சி ஆறாம்பண்ணை, கொங்கராயகுறிச்சி ஆகிய பகுதிகளில் இந்த பணி நடந்து முடிந்துள்ளது. தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் ஆலோசனை படி நிதி பெறப்பட்டு மீண்டும் இந்த பணி துவங்கியது.
கடந்த (2.02.2025) ஸ்ரீவைகுண்டம் கணியான் காலனியில் இருந்து ஆற்றுக்கரைக்குள் உள்ள முள்செடிகளை அகற்றும் பணி ஸ்ரீவைகுண்டம் அனைத்து வியாபாரிகள் சங்கம் மேற்பார்வையில் துவங்கியது.
கடந்த எட்டு மாதங்களாக ஸ்ரீவைகுண்டம் முதல் ஆழ்வார்திருநகரி வரை. மறு கரை வழியாக ஆழ்வார் தோப்பில் இருந்து ஆழ்வார்திருநகரி வரை சுமார் 12 கிலோ மீட்டரில் முள்செடிகள் அகற்றப்பட்டுள்ளது. அதிகமான முள்செடிகள் யாரும் உள்ளே புக முடியாமல் அடர்ந்து காணப்பட்ட இந்த இடத்தில் முள்செடிகளை அகற்றி இருப்பது பொதுமக்களால் பாராட்டு பெற்றுள்ளது.
இதற்கிடையில் மேலஆழ்வார்தோப்பு கிராம உதயம் மூலமாக தாமிரபரணியின் கரையோரங்களில் ஒருலட்சம் பனை விதைகள் நடும் பணி மற்றும் ஆழ்வார்திருநகரி பேரூராட்சி சார்பில் 1000 மரக்கன்று நடும் பணி கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் ஆற்றின் கரையோரங்களில் பனைவிதைகள் நடுதல், ஒரு லட்சம் விதைப்பந்துகள் வீசுதல், ஆயிரம் மரக்கன்றுகள் நடுதல் ஆகிய முப்பெரும் விழா ஸ்ரீவைகுண்டத்தில் நடந்தது.
விழாவிற்கு, தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமை வகித்து ஆற்றின் கரையோரங்களில் பனைவிதைகள்&மரக்கன்றுகள் நட்டு வைத்து, ஒரு லட்சம் விதைப்பந்துகள் வீசும் திருவிழாவினை தொடங்கி வைத்தார்.
விழாவில், ஸ்ரீவை டவுன் பஞ்.தலைவர் சினேகவள்ளி பாலமுருகன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளரான எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வரவேற்று பேசினார். நதிக்கரை முருகன் கோயில் அறங்காவலர் சந்துரு, முன்னாள் பேரூராட்சி சேர்மன் கந்த சிவசுப்பு ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாவட்ட வன அலுவலர் இளையராஜா மரக்கன்று நட்டு, பனை விதைகளையும் விதைப்பந்துகளையும் மாணவ மாணவிகளுடன் இணைந்து வி¬த்து சிறப்புரையாற்றினார். தோரணமலை முருகன் கோயில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ரவீந்திரகுமார், உதவி பொறியாளர் முரசொலிமாறன்,ஸ்ரீவைகுண்டம் வட்டார பயணிகள் நலச்சங்க தலைவர் அரசன்துரைசாமி, வியாபாரிகள் சங்க தலைவர் பெரியசாமி, அன்னை தாமிரபரணி ஆறு பாதுகாப்பு மக்கள் இயக்க சாமிநாதன், சித்திரைவேல், முருகன்,மருதம் பவுன்டேசன் ரமேஷ், விவசாய சங்கத் தலைவர் தியாகச் செல்வன், பயணிகள் நலச்சங்க ஸ்ரீரங்கம், கிராம உதயம் மகளிர் குழுவினர்கள், பணியாளர்கள், குமரகுருபர சுவாமிகள் தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகள், குமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி என்சிசி ஆசிரியர்நல்லாசிரியர் சிவகளை மாணிக்கம் மாணவர்கள், ஜோஸ் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர்கள், ஆசிரியை-ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
கிராம உதயம் நிர்வாக கிளை மேலாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.


