முத்தாலங்குறிச்சியில் அமைந்துள்ள பழமையான குணவதியம்மன் திருக்கோயிலில் விமான கோபுரம் பாலஸ்தாபனம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், முத்தாலங்குறிச்சியில் நல்லாண்பிள்ளை பெற்ற குணவதி அம்மன் என்ற பிரசித்தி பெற்ற கோயில் உள்ளது. பழமையான இந்த கோயிலில் கும்பாபிசேகம் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு நடந்தது. தற்போது கும்பாபிசேகம் நடைபெறுவதற்கான ஆரம்பகாலகட்டப்பணி விமான கோபுரம் பாலஸ்தாபனம் நடைபெற்றது. இதற்காக முதல் நாள் மாலை அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜை, புன்யாகவாசகம், பஞ்சகல்யம் சுத்தி, வாஸ்து சாந்தி, துர்கா ஹோமம், அஸ்திர ஹோமத்துடன் துவங்கியது. இரண்டாம் நாள் காலை 7மணிக்கு பஞ்சகல்யம், ருத்ர ஹோமம், ஐக்யமத்ய சுக்தஹோமம் நடந்தது.
இதையொட்டி முத்தாலங்குறிச்சி சிவகாமி சமேத வீரபாண்டீஸ்வரர், லெட்சுமி நரசிம்மர், ராம விநாயகர் கோயிலில் சிறப்பு அபிசேகம் , அலங்காரம் ஆராதனை நடந்தது. தொடர்ந்து குணவதியம்மன்கோயில் முதலாம் கால யாகபூஜை நடந்தது. இதில் வேத பா£ராயணம், திரவ்யாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. மூன்றாம் நாள் காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து திருக்கோயில் விமான கோபுரம் பாலஸ்தாபனம் நடந்து பிரசாதம் வழங்கப்பட்டது.
விழாவில், குணவதி அம்மன் பக்தஜனசபா கமிட்டி தலைவர் விஸ்வநாதன், செயலாளர் வெங்கட்ராமன், பொருளாளர் ஸ்ரீதர், கமிட்டி உறுப்பினர் பால சீனிவாசன், சிவன் கோயில் அறங்காவலர் முத்தாலங்குறிச்சி காமராசு, ராமவிநாயகர் கோயில் அறங்காவலர் வள்ளிநாதன், லெட்சுமிநரசிம்மர் கோயில் அறங்காவலர் ஷேசப்பன், லெட்சுமி நரசிம்மர் கோயில் பக்த ஜனா கமிட்டி தலைவர் சோமசுந்தரம், சுவாமிநாதன், செல்லக்குட்டி, முன்னால் பஞ்சாயத்து துணைத்தலைவர் முருகன், ஊர் கமிட்டி ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர். பாலாஸ்தாபனம் ஏற்பாடுகளை செல்வம் பட்டர் குழுவினர் செய்து இருந்தனர்.


