தூத்துக்குடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி அருகே உள்ள வாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி மகன் சித்திரவேல் (79), விவசாயி இவர் நேற்று மாலை அங்குள்ள பஸ் ஸ்டாப் அருகில் சாலைையை கடந்து செல்ல முயன்றபோது, மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த ஒரு வாகனம் அவர் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


