தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜா மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மேட்டுப்பட்டி சுடுகாடு அருகே மாேட்டார் பைக்குடன் நின்று கொண்டிருந்த 3பேரை சோதனை செய்த போது, அவர்கள் விற்பனைக்காக கஞ்சாவை மறைத்து வைத்து இருப்பது தெரியவந்தது.
போலீஸ் விசாரணையில் அவர்கள் மாதவன் காலனி ஆறுமுகம் மகன் முனீஸ்வரன் (20), சங்கு குளி காலனி மாடசாமி மகன் அஜித்குமார் (19), நேரு நகர் சுனாமி காலனி அருளப்பன் மகன் செல்வம் (27) எனத் தெரியவந்தது. அவர்கள் 3பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 30 கிராம் கஞ்சா மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


