
திருநெல்வேலியில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றி கிராம உதயம் தொண்டு நிறுவனத்தை பாராட்டி விருது.
திருநெல்வேலியில் நேற்று மாலைமுரசு சார்பாக பொங்கல் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. இந்த விழாவில் கொரொனா காலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் மிகச்சிறப்பாக சேவைகள் ஆற்றியதற்காக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் திரைப்பட நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் இணைந்து கிராம உதயம் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாக இயக்குநர் டாக்டர் சுந்தரேசன் சேவையை பாராட்டி பொன்னாடை அணிவித்து மற்றும் பாராட்டு விருது வழங்கி கௌரவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கிராம உதய வழக்கறிஞர் புகழேந்தி பகத்சிங், மேலாளர் மகேஸ்வரி, பகுதி பொறுப்பாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர்.