தூத்துக்குடியில் வருகிற ஏப்.6ம் தேதி அரசு பணியாளர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக ஆட்சியர் என். வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தூத்துக்குடி மாவட்டப் பிரிவு 2017-2018-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 06.04.2018 அன்று தூத்துக்குடி SDAT மாவட்ட விளையாட்டரங்கத்தில் வைத்து காலை 9.30 மணி முதல் நடைபெற உள்ளது.
இப்போட்டிகளின் மூலம் வருடம் முழுவதும் கடுமையான பணிச்சுமையுடன் பணிபுரியும் அனைத்து அரசு பணியாளர்களுக்கும் ஒரு மாற்றத்தை கொடுத்து புதிய உத்வேகத்தை உருவாக்கவும், குழு மனப்பான்மையையும், ஒற்றுமை உணர்வையும் உருவாக்கவும் மாவட்ட நிர்வாகத்துடன் ஒரு நல்லுறவை ஏற்படுத்தவும், இந்த மாவட்ட அளவிலான அரசுப் பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது.
இப்போட்டிகளில் தமிழ்நாடு அரசு துறையை சார்ந்த நிரந்தர ஊழியர்கள், அரசு பள்ளிகளில் பணிபுரியும் இருபால் உடற்கல்வி இயக்குநர்கள்இ உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் நிரந்தரப் பணியாளர்கள் கலந்து கொள்ள தகுதியுடையவர்கள். தற்காலிக தினக்கூலி பணியாளர்கள், சீருடைப் பணியாளர்கள், ஆறு மாதத்திற்குள் அரசு பணியில் சேர்ந்த பணியாளர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை.
நடைபெறவுள்ள போட்டிகள்:
1. ஆண்கள்: 100 மீ., 200 மீ., 800 மீ., 1500 மீ., நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 4 ஒ 100 மீ ரிலே.
2. பெண்கள்: 100 மீ., 200 மீ., 400 மீ., 800 மீ., நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 4 ஒ 100 மீ ரிலே.
3. ஆண்கள் மற்றும் பெண்கள்: இறகுப்பந்து
4. ஆண்கள் மற்றும் பெண்கள்: கூடைப்பந்து
5. ஆண்கள்: கால்பந்து
6. ஆண்கள் மற்றும் பெண்கள்: டென்னிஸ்
7. ஆண்கள் மற்றும் பெண்கள்: கபாடி
8. ஆண்கள் மற்றும் பெண்கள்: மேஜைப்பந்து
9: ஆண்கள் மற்றும் பெண்கள்: வாலிபால்
போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உடையவர்கள் 06.04.2018 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கத்திற்கு தேவையான உடை, உபகரணங்கள், அடையாள அட்டை ஆகியவற்றுடன் வந்து சேர வேண்டும். இப்போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு சிறப்பு விடுப்பு உண்டு. பயணப்படி தினப்படியை தாங்கள் பணிபுரியும் துறையில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 0461-2321149 என்ற எண்ணில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் அறிவித்துள்ளார்.


