
தூத்துக்குடி மாவட்டத்தில் ஜமாபந்தி வருகிற 15ம் தேதி தொடங்குகிறது.
இது தொடர்பாக ஆட்சியர் என்.வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்டத்தில் 1427-ம் பசலி ஆண்டிற்கு வருவாய் தீர்வாய கணக்குகள் முடிவு செய்யும் பணி (ஜமாபந்தி) 15.05.2018 முதல் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் அவர்களுக்கெதிரே குறிப்பிடப்பட்ட நாட்களில் பிரதி தினம் காலை 10.00 மணிக்கு சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
தீர்வாய அலுவலர் / தணிக்கை நடைபெறும் நாட்கள்
1. கோவில்பட்டி வட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர், 15.05.2018 முதல் 22.05.2018 முடிய (திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக)
2. கயத்தார் வட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர், 15.05.2018 முதல் 25.05.2018 முடிய (திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக)
3. ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் தூத்துக்குடி சார் ஆட்சியர், 15.05.2018 முதல் 30.05.2018 முடிய (திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக)
4. திருச்செந்தூர் வட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் 15.05.2018 முதல் 25.05.2018 முடிய (திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக)
5. ஓட்டப்பிடாரம் வட்டத்தில் கோவில்பட்டிகோட்டாட்சியர், 15.05.2018 முதல் 25.05.2018 முடிய (திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக)
6. தூத்துக்குடி வட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்), 15.05.2018 முதல் 22.05.2018 முடிய (திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக)
7. சாத்தான்குளம் வட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், 15.05.2018 முதல் 18.05.2018 முடிய (திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக)
8. எட்டையபுரம் வட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர், 15.05.2018 முதல் 25.05.2018 முடிய (திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக)
9. விளாத்திகுளம் வட்டத்தில் தூத்துக்குடி கலால் உதவி ஆணையர் 15.05.2018 முதல் 29.05.2018 முடிய (திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக)
பொதுமக்கள் தங்களது கோரிக்கை விண்ணப்பங்களை அந்தந்த கிராமங்களுக்குரிய வருவாய் தீர்வாயம் நடைபெறும் நாளில், வருவாய் தீர்வாய அலுவலர்களிடம் கொடுத்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் கேட்டுக் கொள்ளார்.