
தமிழ்செம்மல் விருது பெற்ற எழுத்தாளருக்கு சத்தக்காரன்பட்டியில் பாராட்டு விழா.
வருடம் தோறும் தமிழக அரசு சார்பில் தமிழ்செம்மல் விருது மாவட்டத்திற்கு ஒரு நபருக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதானது தமிழை பெருமைப்படுத்தியதற்காக வழங்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டுக்கான தமிழ்செம்மல் விருது தூத்துக்குடி மாவட்டத்திற்கு செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு வழங்கப்பட்டது.
இந்தநிலையில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவை பல்வேறு அமைப்பினரும் பாராட்டி வருகின்றனர். இதற்கிடையில் நேற்றைய தினம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள சத்தக்காரன்பட்டியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு ஊர் மக்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். இதற்கான ஏற்பாடுகளை ஊர் மக்கள் செய்திருந்தனர்.