
செய்துங்கநல்லூர் நூலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டி தரவேண்டும் என வாசகர் வட்ட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செய்துங்கநல்லூர் வாசகர் வட்ட கூட்டம் நூலக வளாகத்தில் நடந்தது. வாசகர் வட்ட தலைவர் திருமலை நம்பி தலைமை வகித்தார். மணக்கரை போஸ்ட் மாஸ்டர் காளிமுத்து, ஓய்வு பெற்ற தபால்காரர் செல்லப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலகர் துரைராஜ் வரவேற்றார். சென்னை பி.எஸ்.என்.எல் கண்காணிப்பாளர் முத்துசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். செய்துங்கநல்லூர் நூலக கட்டிடம் பழுதடைந்த காரணத்தினால் புதிய கட்டிடம் கட்டித்தர தொகுதி எம்.எல்.ஏ சண்முகநாதன் அவர்களை சந்தித்து மனு கொடுப்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, சின்னதுரை, கோபாலகிருஷண்னன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நயினார் நன்றி கூறினார்.