
கொங்கராயகுறிச்சியில் உள்ள சிவகாமி சமேத வீரபாண்டிஸ்வரர் ஆலயம் மிகவும் பழமையானது. இந்த கோயில் 1876ல் வந்த தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் பூமிக்குள் மூழ்கி விட்டது. அதன் பின் பக்தர்கள் படிப்படியாக திருப்பணி செய்து இந்த ஆலயத்தினை வெளிக்கொண்டு வந்தனர். தற்போது இங்கு பூஜை முறையாக நடந்து வருகிறது. இங்குள்ள சட்டநாதர் என்னும் பைவரர் மிகவும் சிறப்பு வாய்ந்தவர். இவரை வணங்க கேரள மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அத்ரி மலையில் இருந்து கொடிமரம் இங்கு கொண்டு வந்து பிரதிட்சை செய்யப்பட்டுள்ளது.
ஆனால் எந்த திருப்பணியும் முழுமையாக நடைபெறவில்லை. எனவே தொடர்ந்து ஞாயிற்று கிழமை தோறும் தூத்துக்குடி அப்பர் நற்பணி மன்ற உழவாரபணி சார்பில் திருப்பணி நடந்து வருகிறது. இதற்காக சிறப்பு ஆயத்த பூஜையும் நடந்தது. 8ந் தேதி தேய் பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
இதையொட்டி சிவன், அம்பாள், பைரவருக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம் ஆராதனை நடந்தது. நிகழ்சியில் ஓய்வு பெற்ற தொலைதொடர்பு அதிகாரி பாலசுப்பிரமணியன். தாசில்தார் முத்துராமலிங்கம், மகாதேவ அய்யர், ஸ்ரீனிவாச சிவா, ஆழ்வார்கற்குளம் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் துரை, காட்டுராஜன், உலகநாதன், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.