
கருங்குளம் பஞ்சாயத்து அலுவலகத்தில் அம்மா திட்ட முகாம் நடந்தது. ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ் பயஸ் அருண் தலைமை வகித்தார். மனுகளை மண்டல துணை வட்டாச்சியர் முருசேகன் பெற்றுக்கொண்டார். இந்த முகாமில் 56 மனுக்கள் பெறப்பட்டது. இதில் இலவச பட்டா, முதியோர் ஊனமுற்றோர் உதவி தொகை உள்பட பல கோரிக்கை மனுக்கள் இருந்தன. இந்த மனுக்களுக்கு அந்தந்த அதிகாரிகளுக்கு அனுப்பி உடனடியாக தீர்வு கிடைக்க ஆவண செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இந்தமுகாமில் வருவாய் ஆய்வாளர் அய்யனார், கிராம நிர்வாக அதிகாரிகள் மணிகண்டன், கந்தசுப்பு, சிவசந்திரன், கருங்குளம் ஊராட்சி எழுத்தர் சோமு உள்பட பலர் கலந்துகொண்டனர்.